கொரோனா தடுப்பு நடவடிக்கை சாதனங்கள் அனுப்பும் பணி துவக்கம்!

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்புக்கான சாதனங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இருந்து 3 ஆயிரத்து 510 தெர்மாமீட்டர் கருவிகள், 45 ஆயிரத்து 108 முழு கவச உடைகள், கையுறைகள், முகக்கவசங்கள், சானிடைசர் பாட்டிகள் ஆகியவற்றை பெட்டிகளில் அடைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version