முருங்கை விவசாயம் மூலம் நீடித்த லாபம் பெறலாம் -முருங்கை விஞ்ஞானி

முருங்கை விவசாயம் மூலம் நீடித்த லாபம் பெறலாம் என திண்டுக்கல்லை சேர்ந்த முருங்கை விஞ்ஞானி கூறியுள்ளார்

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஏபி அழகர்சாமி. முருங்கை விஞ்ஞானியான இவர் தமிழ்நாட்டிலுள்ள 9 நாட்டு ரகங்களில் இருந்து மகரந்த சேர்க்கை மூலம் புதிய ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மேலும் ஒட்டு ரக கன்றுகள் உற்பத்தி செய்து தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறார்.இதற்காக இவர் 6 முறை பல்வேறு அமைப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் இவர், மற்ற விவசாயத்தின் மூலம் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் முருங்கை விவசாயத்தின் மூலம் நிலைத்த வருமானம் பெற்று லாபம் பார்க்கலாம் என்கிறார்.

Exit mobile version