கடைசி டி20 போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா

தொடரின் வெற்றியை தீர்மானிக்கும், இந்திய – நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. வெலிங்டனில் நடந்த முதலாவது இருபது ஓவர் போட்டியில், நியூஸிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆக்லாந்தில் நடைபெற்ற 2 வது ஒரு நாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே நடந்த ஒரு நாள் தொடரை 1 க்கு 4 என்ற கணக்கில் இழந்த நியூஸிலாந்து அணி, 20 ஓவரை தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இரு அணிகளும் 1 க்கு 1 என்ற சம நிலையில் உள்ளதால், ஒரு நாள் தொடரை போலவே 20 ஓவர் தொடரை கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்ப இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி என்பதால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version