லாரி மோதி 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே டிப்பர் லாரி மோதி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூரை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த மகாராஜனின் 2 வயது குழந்தையான தனஸ்ரீ சாலை ஓரம் உள்ள வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாக அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று, முன்னே சென்ற வாகனத்தை கடக்க முயன்றது. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் தனுஸ்ரீ தலை நசுங்கி உயிரிழந்தாள்

Exit mobile version