மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே டிப்பர் லாரி மோதி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூரை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த மகாராஜனின் 2 வயது குழந்தையான தனஸ்ரீ சாலை ஓரம் உள்ள வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாக அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று, முன்னே சென்ற வாகனத்தை கடக்க முயன்றது. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் தனுஸ்ரீ தலை நசுங்கி உயிரிழந்தாள்