தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version