கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்த மேஜர் சித்ரேஷ் சிங்

தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்த மேஜர் சித்ரேஷ் சிங்கின் உடலுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சித்ரேஷ் சிங், ராணுவத்தில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவில் மேஜராக இருந்து வந்தார். இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை சித்ரேஷ் தலைமையிலான குழுவினர் செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கண்ணிவெடி செயலிழக்கப்பட்ட நிலையில் மற்றொரு கண்ணிவெடி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த சித்ரேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தநிலையில், சித்ரேஷ் சிங்கின் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

வீர மரணமடைந்த மேஜர் சித்ரேஷ் சிங்கிற்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி திருமணம்  நிச்சயிக்கப்பட்டிருந்ததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Exit mobile version