டெல்லியில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்: நாளை வாக்குப்பதிவு

டெல்லியில் தேர்தல் பிரசாரம் நேற்று முடிவுற்ற நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்தல் களத்தில் மொத்தம் 672 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 593 பேர் ஆண்கள், 79 பேர் பெண்கள் ஆவர். அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகளான பாஜக சார்பில் 67 பேர், காங்கிரஸ் சார்பில் 66 பேர், பகுஜன் சமாஜ் சார்பில் 68 பேர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 3 பேர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் 5 பேர் போட்டியிடுகின்றனர். அதேசமயம், அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி சார்பில் 70 பேர், அங்கீகாரம் பெற்ற மற்ற கட்சிகள் சார்பில் 243 பேர், மற்றும் சுயேச்சைகள் 148 பேர் போட்டியிடுகின்றனர். நாளை பதிவாகும் வாக்குகள் வரும்11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Exit mobile version