லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் கைது

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த ஒருவரை கைது செய்த காவல்துறையினர் நகைகளை பறிமுதல் செய்து மற்றொரு கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக 7 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து வாகனத்தில் நகை மூட்டையுடன் இருந்த மணிகண்டன் என்பவர் லலிதா ஜுவல்லரியின் நகைக் கொள்ளையில் ஈடுபட்டதை உறுதி செய்ததை அடுத்து, அவரிடமிருந்து 5 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். அதை தொடர்ந்து திருவாரூர் விரைந்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே மற்றொரு முக்கிய கொள்ளையனான முருகனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய கொள்ளை சம்பவங்களில் முருகன் தொடர்புடையவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version