புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார்

புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக என்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவி ஏற்றார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

முதலமைச்சராக அக்கட்சி தலைவர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றதை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் தேர்வு செய்யப்பட்டார்.

துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு, ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், தற்காலிக சபாநாகராக லட்சுமி நாராயணன் பதவியெற்றார்.

அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்ததை தொடர்ந்து, சட்டப்பேரவை வந்த லட்சுமி நாராயணன், பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Exit mobile version