குடிமராமத்துப் பணியால் 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி : விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தமிழக அரசு மேற்கொண்ட குடிமராமத்து பணியால் 5ஆண்டுகளுக்கு பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத் துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது கடந்த மாதம் தமிழக அரசின் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டது. இந்த பகுதியில் பெய்த தொடர் மழையால் ஏரிக்கு தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிமாரமத்துப் பணியை மேற்கொண்ட தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version