கரும்பு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் கைது

மதுரையில் கரும்பு தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

அலங்காநல்லூரியில் கரும்பு தோட்டத்தில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்று காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று சோதனை நடத்தினர்.

அங்கு பெண் ஒருவர், அதிக விலைக்கு மதுபானங்களை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அப்பெண்ணை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர், கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 71 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version