லடாக் எல்லையில் உயிர்நீத்த தமிழக வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டதை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் தனி ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது சொந்த ஊரான கடுக்கலூர் வந்தடைந்தது. அரசு சார்பாக, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சென்று பழனியின் குடும்படுத்தாருக்கு ஆறுதல் கூறினார். உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலிக்கு பிறகு கடுக்கலூரில் முப்படை வீரர்களின் மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Exit mobile version