முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு கும்கி பயிற்சி

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள நான்கு யானைகளுக்கு இன்று கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது.

கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள ஆண் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகள் நிலங்களை நாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தி  வருகின்றனர். இதில் இன்று நான்கு யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது

Exit mobile version