பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஜம்புகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உற்சவ பூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

கோயிலில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளின் சன்னதிகளில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

Exit mobile version