வெள்ளத்தில் தத்தளிக்கும் குமரி மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்யும்

கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நாளை வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version