ஸ்டாலின் பேச்சைக்கேட்டு தூங்கிய குமரி வேட்பாளர் வசந்த குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் தூங்கி வழியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது, குமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் தூங்கி வழிந்தார். கூட்டத்தில் இருந்த தொண்டர் குடிபோதையில், கீழே விழுந்து கிடந்த சம்பவமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version