கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் இந்த இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்று 11 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடையானது தொடர்ந்து 23 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version