காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு ; கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாரை 2 ஆண்டுகளாக காணவில்லை

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லகுமாரை காணவில்லை என பதிவிட்டு, அந்த தொகுதி மக்கள் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்து வருகின்றனர்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர், காங்கிரஸ் கட்சியின் செல்லகுமார்.

அந்த தேர்தலில் திமுக கூறிய ஏராளமான பொய் வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, செல்லகுமார் தன் பங்குக்கு சில வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

அந்த வாக்குறுதிகளை கிருஷ்ணகிரி தொகுதி மக்கள் தற்போது பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதெல்லாம் செய்து கொடுப்பேன் என கூறி வாக்கு பெற்று வெற்றியடைந்து எம்.பி.ஆனவரை கண்டீரா? அவர கண்டா வரச்சொல்லுங்க என தொகுதி மக்கள் தங்கள் எம்.பி.யை கடந்த 2 ஆண்டுகளாக தேடி வருகின்றனர்.

கொரோனா பரவல் குறித்தும், தொகுதி மக்களின் நிலை குறித்தும் அறிந்துக்கொள்ள விரும்பாத ஒருவரை, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தது குறித்து, தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

Exit mobile version