அதிமுக தலைமைக் கழகம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக கொண்டு கீத உபதேசங்களை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக அதிமுக தலைமைக் கழகம் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பலகாரங்கள் படைத்து கிருஷ்ணரை வரவேற்க மக்கள் தயாராகியுள்ளதாகவும் இந்நன்னாளில் அனைத்து உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நான் என்ற பற்று நீங்கி இன்ப துன்பத்தை சமமாக கொண்டு வாழவும் மனதையும் மதியையும் இறைவனிடத்தில் அர்பணித்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிப்பிடப்பட்டுள்ளது. கீதை உபதேசங்களை மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் தழைத்தோங்க வாழ்த்துவதாக கூறியுள்ளனர்.

Exit mobile version