திருப்பதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உறியடி திருவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருமலையில் தேவஸ்தானம் சார்பில் உறியடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருமலையில் உறியடி திருவிழா நடைபெற்றது. உற்சவர் மலையப்பசுவாமி தங்கப் பல்லக்கிலும், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றொரு பல்லக்கிலும் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உறியடி திருவிழாவை உள்ளூர் மட்டுமின்றி திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

Exit mobile version