கொரோனாவிற்கு நேற்று ஓரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழப்பு : ஈரான் அரசு

ஈரானில் கொரோனாவிற்கு நேற்று ஓரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 194 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஓரே நாளில் மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனா மற்றும் தென் கொரியாவிற்கு அடுத்தப்படியாக கொரோனாவால் ஈரான் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Exit mobile version