கொரிய பெண்கள் கடத்தி வந்த 24 கிலோ தங்கம் பறிமுதல்

விமானம் மூலம் சென்னை வந்த கொரிய நாட்டினரிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்பிலான 24 கிலோதங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக தங்க கட்டிகள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த தென் கொரியாவை சேர்ந்த இரு பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களின் உடமைகளை சோதனையிட்டதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 24 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரு பெண்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version