கொடநாடு வழக்கு விசாரணை; தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சாட்சிகளின் ஒருவரான அனுபவ் ரவி உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார்.

மேல் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதமே, 3 மாதத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுள்ள நிலையில், அதனை நிறைவேற்றாமல், காவல்துறையினர் மேல் விசாரணை நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாங்கள் சொல்வது போல சாட்சி அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாகவும், விசாரணை என்ற பெயரில், நாட்களைக் கடத்துவது தனக்கு மனவேதனை அளிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கும் மனுவில் ரவி தெரிவித்துள்ளார். எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது மனுதாரர் ரவியின் கோரிக்கை.

Exit mobile version