கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் 10 பேரும் உதகை தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 10 பேரும் உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் 10 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு நீதிபதி வடமலை முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரும், வரும் ஜுன் மாதம் 3-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version