கொடநாடு விவகாரம்- இதன் பின்னணியில் யார் மக்களுக்கு தெரியும்

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் 400-க்கும் மேற்பட்டோர்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் , கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எள்ளளவும் தொடர்பில்லை என்று கூறினார். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்ற அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிறகு, தமிழகத்தில் வலுவான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

Exit mobile version