கொடநாடு விவகாரம் : ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றனம் கடும் எச்சரிக்கை

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி ஸ்டாலின் தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணையை ஸ்டாலின் எதிர்கொள்ளுமாறு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றனம் எச்சரித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உரிய ஆதாரங்கள் இல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும், இது குறித்து விளக்கம் அளிக்க ஸ்டாலினுக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி ஸ்டாலின் தொடர்ந்து பேசினால், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதித்திருந்த தடையை நீக்கி,விசாரணையை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றனம் எச்சரித்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Exit mobile version