கொடநாடு விவகாரம்: மேத்யூஸ் சாமுவேல் மீது மான நஷ்ட ஈடு வழக்கு

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்.

கொடநாடு ஆவணப்படம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது முற்றிலும் பொய்யான அவதூறுகளை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கூறி வருகிறார் . இந்நிலையில், தனது பெயர் மற்றும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூஸ் சாமுவேல் பல்வேறு அவதூறுகளை பரப்பிவருவதாக கூறி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், மேத்யூஸ் சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 6 பேரும் தன்னை பற்றி பேசுவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்றும் மனுவில் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே இவ்வழக்கை நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக, உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார்.

Exit mobile version