கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் லட்சக்கணக்கான மதிப்புள்ள உயர் ரக மரங்கள் எரிந்து சாம்பலாயின.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறை பனியின் தாக்கம் காரணமாக பெரும்பாலான இடங்களில் உள்ள மரங்கள், செடிகள் கருகியது. இந்த நிலையில், கொடைக்கானல் – பழனி சாலையான வெள்ளை பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீர் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சிட்டிவியூ மற்றும் சர்வே நம்பர் வனப்பகுதிகளிலும் திடீர் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயால், பல்வேறு உயர் ரக மரங்கள் எரிந்து சாம்பலாகின.

Exit mobile version