கூட்டுக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதுங்கிய சிறுத்தை குட்டி

தருமபுரி அருகே பென்னாகரம் வனப்பகுதியின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குள் கடந்த 3 நாட்களாக பதுங்கியிருந்த ஒன்றரை வயது சிறுத்தைக் குட்டியை தண்ணீரை பீய்ச்சியடித்து வனத்துறையினர் பிடித்துள்ளனர். இதையடுத்து சிறுத்தைக் குட்டியை கூண்டில் அடைத்த வனத்துறையினர் அதை ராசிமணல் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version