கள்ளக்குறிச்சி சிறப்பு அலுவலராக கிரண் குராலா நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு அலுவலராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும் முதல்வர் கூறியிருந்தார். இதை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியை பிரிப்பது தொடர்பாக கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல பாதுகாப்பு துறை இணைச் செயலாராக இருந்த கிரண் குராலா, கள்ளச்குறிச்சி மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

Exit mobile version