புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பட்டதாரி இளைஞர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில காவல்துறையில், காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும், இதற்கான வயது வரம்பு 22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்தது. ஆனால், வயது வரம்பை 24 ஆக நீட்டிக்கவேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பினர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், தங்களது கோரிக்கையை ஆளுநர் கிரண்பேடி கிடப்பில் போட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கிரண்பேடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Exit mobile version