கிரண் பேடியின் டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் புகைபடத்தால் பரபரப்பு

தர்ணா போராட்டமும் ஒருவகை யோகா தான் என குறிப்பிட்டு இரு காகங்கள் மரம் ஒன்றின் மேல் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசின் முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி காலம் தாழ்த்துவதாக கூறி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இரு காகங்கள் மரம் ஒன்றின் மீது அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கும் கிரண் பேடி, தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதும் ஒருவிதமான யோகா தான் என குறிப்பிட்டுள்ளார். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version