திருடுவதற்கு தடையாக இருந்த நாய்கள் கொலை !

திருடுவதற்கு தடையாக இருந்த நாய்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் மதுராந்தகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கரசங்கால் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக பலரது வீடுகளில் ஆடு, மாடுகள் திருடு போய் கொண்டிருந்தன. இதனால் காவலுக்காக பல வீடுகளில் நாய்களை வளர்க்க தொடங்கினர். இதனையடுத்து திருட்டுச் சம்பவங்கள் குறைந்த நிலையில் இதை அறிந்த சமூக விரோத கும்பல், இறைச்சியில் பூச்சி மருந்தை கலந்து இரவோடு இரவாக பல இடங்களில் வீசியுள்ளது.

இதனை உண்ட இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்தன. மறுநாள் நாய்களை தேடிய கிராமத்தினர், தெருவோரம் ஆங்காங்கே அவைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Exit mobile version