டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக மண்ணெண்ணெய் விநியோகம் -அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கூடுதல் மண்ணெண்ணெய்  வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நிவாரணப்பொருட்களையும் அவர் வழங்கினார்.

பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தர மத்திய அரசு உதவி செய்யும் என தெரிவித்தார். மின்சார பிரச்சினை தீரும் வரை, கூடுதலாக மண்ணெண்ணெய்  வழங்கப்படும் என்றும் இதற்காக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

 

Exit mobile version