கேரளாவில் தன்னை தாக்கிய புலியை கத்தியால் குத்திக் கொன்ற நபர் மருத்துவமனையில் அனுமதி!

kerala tiger news

கேரளாவில் தன்னை தாக்கிய புலியை கொன்று உயிர் தப்பிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சிக்கனம்குடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கோபாலன். இவர் தனது தோட்டத்திற்கு கால் நடையாக சென்றுள்ளார். அப்போது உலா வந்து கொண்டிருந்த புலி ஒன்று திடீரென கோபாலன் மீது சீறிபாய்ந்து தாக்கியுள்ளது.

உடனே கோபாலன், தான் வைத்திருந்த கத்தியை கொண்டு புலியை சரமாரியாக குத்தியதில், புலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. புலியின் தாக்குதலில் படுகாயமடைந்த கோபாலன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version