கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு!!

 

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் ராஜமாலா பகுதியில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 41 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version