சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது – பிரதமர் மோடி

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவங்கி வைப்பதற்காக கேரள மாநிலத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, கொல்லம் நகரில் நடைபெற்ற பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கேரள மாநிலத்தின் கலாசாரத்தை அழிப்பதில் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் கட்சியும் ஒருமித்த கருத்துடன் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது என கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் ஆட்சி காலத்தில் வளரும் நாடுகளின் பட்டியலில், 142-வது இடத்திலிருந்து 77-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது எனப் பெருமிதம் பொங்க தெரிவித்தார். 

Exit mobile version