கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் விசாரணை!!

கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வப்னா தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், ரகசிய விசாரணைக்காக சென்னை வந்துள்ளனர்.

கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ரமீஸ் உள்ளிட்ட கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ள கேரள கும்பல்களுக்கு, சென்னையில் தங்கம் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தங்கக் கடத்தல் மூலம் கிடைத்த பணம், தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிஐஜி வந்தனா தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தங்கக்கடத்தல் தொடர்பாக சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version