முல்லைப்பெரியாரில் ஆய்வு செய்ய சென்ற தமிழக பொறியாளர்களை தடுத்து நிறுத்திய கேரள அதிகாரிகள்

முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்ற தமிழக பொறியாளர் குழுவை கேரள அரசு தடுத்து நிறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்திருந்தாலும் சகல உரிமையும் தமிழகத்திற்கு உண்டு. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் சார்பில் கள ஆய்வு பயிற்சிக்காக முல்லைப்பெரியாறு அணைக்கு சென்ற தமிழக பொறியாளர் குழுவினரை கேரள வனத்துறையினர் பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். நீண்ட நேரம் கேரள அதிகாரிகளுடன் பேசியும் அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் தல ஆய்வை மேற்கொள்ளாமல் தமிழக பொறியாளர் குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Exit mobile version