பாசனத்திற்காக கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து, பாசனத்திற்காக விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், 39.85 அடி அளவுக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 172 கனஅடியாக உள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து, கிருஷ்ணகிரி அணை வரையிலான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு 2 போக பாசனத்திற்காக தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. தற்போது கோடை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version