கெஜ்ரிவாலின் காலவரையற்ற உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தவிருந்த காலவரையற்ற உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருந்தார். தற்போது, உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியா, பாகிஸ்தானிற்கு இடையில் நிலவும் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தேசத்தின் ஒற்றுமையே முக்கியம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version