காஷ்மீரில் தீவிரவாதிகள்- பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் எல்லை மாவட்டமான புல்வாமாவின் டிரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி அளித்தனர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்தச் சண்டையில் வீட்டிற்குள் பதுங்கியிருந்த 6 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். அந்த வீட்டில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிரவாதிகள் வேறு யாரேனும் பதுங்கி உள்ளார்களா? என பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version