காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற கடும் சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

காஷ்மீரின் புல்வாமா, அனந்த்நாக் மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவன் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். அனந்த்நாக் மாவட்டத்தில் தொடர்ந்து சண்டை நீடிப்பதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

Exit mobile version