கரூரில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

குளித்தலை அருகே மஹாலட்சுமி கோயில் உள்ளது. மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோயிலில், ஆண்டு தோறும், ஆடி பெருக்கை ஒட்டி தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாவில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் கோயில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பின்னர் பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார். தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை காண வெளியூர்களை சேர்ந்த 10 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

Exit mobile version