கரூரில் அரசு சுவர்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்கள் நீக்கம்

தேர்தல் எதிரொலியாக கரூரில் அரசு சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் தேர்தல் 17வது தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், கரூர் கோட்டாட்சியர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், திருவள்ளுவர் மைதானம், பேருந்து நிலையம், கரூர் சுக்காலியூர் ரவுண்டானா, தோரணக்கல்பட்டி ரவுண்டானா, வெங்கக்கல்பட்டி ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் விதமாக வெள்ளை பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நெடுஞ்சாலைகளின் ஒரத்தில் வரையப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்களையும் அழிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version