பள்ளிக்கூடத்தில் வாக்கு சேகரிக்க கூறிய கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட நபர், பணம் தராததால் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், தேர்தல் விதிமுறையை மீறும் வகையில், பள்ளிக்கூடங்களில் வாக்கு சேகரிக்குமாறு தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், கூட்டத்திற்கு வந்த நபர் ஒருவர் தனக்கு பணம் தராததால் சாலையை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version