கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கம்

கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதியளித்ததில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில், அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் இயக்குனராக இருந்த அட்வான்டேஜ் நிறுவனத்தின் 90 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீட்டு வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது . இந்த முடக்கத்தை எதிர்த்து அட்வான்டேஜ் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து, அமலாக்கப் பிரிவு மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகும் வாய்ப்பு இருக்கும் போது, உயர் நீதிமன்றத்தை நேரடியாக நாட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Exit mobile version