கர்நாடகத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று வினாடிக்கு 11ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Exit mobile version