கர்நாடகா, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரம்

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

கர்நாடகாவில் 17 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு தொகுதிகள் தவிர்த்து மற்ற 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை தொடங்கியது. 11 மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில், பல தொகுதிகளில்
பாஜக முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

Exit mobile version