கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்வு

கர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹானூர் அருகேயுள்ள சுல்வாடி கிச்சுகுட்டி மாரம்மா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் பலரின் நிலமை கவலைகிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version